நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வியாழன், 9 பிப்ரவரி, 2017

மூதறிஞர் செம்மல் வ.சுப. மாணிக்கம், பேராசிரியர் க. வெள்ளைவாரணனார் நூற்றாண்டு விழா, நூல் வெளியீட்டு விழா



அன்புடையீர், வணக்கம்.

தமிழாய்வு உலகில் போற்றி மதிக்கத்தகுந்த அறிஞர்களான மூதறிஞர் செம்மல் வ.சுப. மாணிக்கம் அவர்களின் நூற்றாண்டு விழாவினையும்,  திருமுறைச்செல்வர் . வெள்ளைவாரணனார் அவர்களின் நூற்றாண்டு விழாவினையும் உலகத் தொல்காப்பிய மன்றம் சார்பில் நடத்த உள்ளோம். மேலும் முனைவர் மு.இளங்கோவனின் பணிகளைக் குறித்து அறிஞர்கள் வழங்கியுள்ள மதிப்புரைகளின் தொகுப்பான முனைவர் மு. இளங்கோவன் அகமும் புறமும் என்ற நூல்வெளியீட்டு விழாவும் நடைபெற உள்ளது. இந்த முப்பெரும் விழாவில் கலந்துகொண்டு சிறப்பிக்க அன்புடன் அழைக்கின்றோம்.

அழைப்பில் மகிழும்
உலகத் தொல்காப்பிய மன்றம்
புதுச்சேரி – 605 003

நாள்: 11.02.2017காரி(சனி)க்கிழமை,

நேரம்: அந்திமாலை 5.45 மணி முதல் இரவு 8.45 மணி வரை

இடம்: செயராம் உணவகம் (Hotel Jayaram), காமராசர் சாலை, புதுச்சேரி

நிகழ்ச்சி நிரல்

தமிழ்த்தாய் வாழ்த்து:
தலைமை: மயிலம் பொம்மபுர ஆதீனம் இருபதாம் பட்டம்
தவத்திரு சிவஞான பாலய சுவாமிகள்

வரவேற்புரை: முனைவர் ப. பத்மநாபன்

நோக்கவுரை: முனைவர் இரா. நிர்மலா

முன்னிலை: திரு. சிவ. வீரமணி, புலவர் இ. திருநாவலன், புலவர் கதிர். முத்தையன், திரு. தூ. சடகோபன்

நினைவு வணக்கம்:
பேராசிரியர் கா. மீனாட்சிசுந்தரம்,
பேராசிரியர் தமிழண்ணல்
பேராசிரியர் ச.வே.சுப்பிரமணியன்
அறிஞர் மணவை முஸ்தபா
ஆகியோரின் மறைவுக்கு அகவணக்கம் செலுத்துதல்

வ.சுப.மாணிக்கம் குறித்த சிறப்புரைகள்:
தமிழாகரர் தெ. முருகசாமி
முனைவர் இளமதி சானகிராமன்

க. வெள்ளைவாரணனார் குறித்த சிறப்புரைகள்:
பேராசிரியர் கு. சிவமணி
முனைவர் அரங்க. பாரி

தமிழறிஞர்களின் திருவுருவப் படத்திறப்பும் நூல்வெளியீடும்:
திரு. வே. நாராயணசாமி,
மாண்புமிகு முதலமைச்சர், புதுச்சேரி அரசு

நூல் மதிப்பீட்டு உரை:
முனைவர் ஒப்பிலா. மதிவாணன்
தலைவர், தமிழ் இலக்கியத் துறை, சென்னைப் பல்கலைக்கழகம்

முதற்படி பெறுவோர்:
முனைவர் வி. முத்து
நாட்டியக் கலைஞர் திரு. இரகுநாத் மனே(பிரான்சு)
திருவாட்டி சிவகாமி நாயகர்
திருவாட்டி தா.பெ.அ. தேன்மொழி
திருவாட்டி இராசேசுவரி தமிழ்மணி

சிறப்பு அழைப்பாளர்கள்:
பேராசிரியர் மாதரி வெள்ளையப்பன் ( வ.சுப.மாணிக்கம் அவர்களின் மகளார்)
மருத்துவர் மு. திருநாவுக்கரசு, திருவாட்டி மங்கையர்க்கரசி திருநாவுக்கரசு (க. வெள்ளைவாரணனார் மகளார்)

நன்றியுரை: முனைவர் அரங்க. மு. முருகையன்


தொடர்புக்கு: 0091 9442029053

2 கருத்துகள்:

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

விழா சிறக்க வாழ்த்துக்கள் ஐயா
தங்களுக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

மனம் நிறைந்த வாழ்த்துகள்.